சென்னையில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - மத்திய இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்பு

April 17, 2023

சென்னை கொரட்டூரில் நேற்று ஆர்.எஸ்.எஸ்.பேரணி அமைதியாக நடந்து முடிந்தது. பேரணியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். சென்னை கொரட்டூரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் இருந்து நேற்று மாலை 4.15 மணியளவில் பேரணி தொடங்கியது. முன்னதாக ஆர்.எஸ்.எஸ். கொடிக்கு மூத்த பெண் நிர்வாகிகள் ஆரத்தி எடுத்தனர். இந்த பேரணியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். பேரணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்பாரத தலைவர் வன்னியராஜன், அனைத்து செட்டியார் சங்கங்களின் […]

சென்னை கொரட்டூரில் நேற்று ஆர்.எஸ்.எஸ்.பேரணி அமைதியாக நடந்து முடிந்தது. பேரணியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.

சென்னை கொரட்டூரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் இருந்து நேற்று மாலை 4.15 மணியளவில் பேரணி தொடங்கியது. முன்னதாக ஆர்.எஸ்.எஸ். கொடிக்கு மூத்த பெண் நிர்வாகிகள் ஆரத்தி எடுத்தனர். இந்த பேரணியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். பேரணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்பாரத தலைவர் வன்னியராஜன், அனைத்து செட்டியார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அருணாச்சலம், சென்னை மாநகர தலைவர் சந்திரசேகர், தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ் நாடார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

1,200 பேர் பங்கேற்ற இந்த பேரணியானது, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொரட்டூர் மத்திய நிழற்சாலையில் இருந்து தொடங்கி கிழக்கு நிழற்சாலை, கொரட்டூர் பஸ் நிலையம் வழியாக 5.15 மணிக்கு விவேகானந்தா பள்ளிக்கு வந்தடைந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu