கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 100 பஸ்களை இயக்கி வெள்ளோட்டம்

December 13, 2023

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கரில் சுமார் 397 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பஸ் நிலையத்தின் முன் பகுதியில் தண்ணீர் அதிக அளவு தேங்கியது. இதனால் மழைநீர் வெளியேற சாலையில் குறுக்கே கல்வெட்டுகள் அமைக்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்து […]

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கரில் சுமார் 397 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பஸ் நிலையத்தின் முன் பகுதியில் தண்ணீர் அதிக அளவு தேங்கியது. இதனால் மழைநீர் வெளியேற சாலையில் குறுக்கே கல்வெட்டுகள் அமைக்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்து புதிய பஸ் நிலையம் திறக்கும் நிலையில் தயாராக உள்ளது. இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்கி பார்க்கும் வெள்ளோட்டம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் அரசு விரைவு பஸ்கள், மாநகர பஸ்கள் என 100 பஸ்கள் அனைத்தும் வெளியில் இருந்து புறப்பட்டு கிளாம்பாக்கம் புதிய நிலையத்திற்குள் வந்தது. பின்னர் அனைத்து பஸ்களும் உரிய இடங்களுக்கு சென்று நிறுத்தப்பட்டன. இந்த வெள்ளோட்டம் பார்க்கும் நிகழ்ச்சி நாளையும் நடைபெற உள்ளது. மேலும் அங்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து ஆய்வுகள் செய்து பஸ்களை இயக்க ஒத்திகை நடைபெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu