இன்று இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதல் முறையாக 84.0725 என்ற அளவைத் தொட்டு புதிய வீழ்ச்சிப் புள்ளியை எட்டியது. இது கடந்த வெள்ளிக்கிழமை பதிவான 84.07 என்ற முந்தைய குறைந்த மதிப்பை விடவும் குறைவானது. வெளிநாட்டு வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக டாலரை அதிக அளவில் வாங்கியதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சீனா, பொருளாதாரத்தை தூண்டும் நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் ஆசிய நாடுகளின் நாணயங்கள் பலவீனமடைந்ததும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக அமைந்தது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.