நவம்பர் மாதம் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு 0.5% குறைந்துள்ளது. இது மார்ச் மாதத்திற்குப் பிறகு ரூபாய் மதிப்பு சந்தித்த மிகப்பெரிய சரிவு ஆகும். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உலக நாடுகளின் நாணயங்கள் மதிப்பிழந்து வருகின்றன. இந்திய ரூபாயும் இதிலிருந்து தப்பவில்லை.
நவம்பர் மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து சுமார் 1.7 பில்லியன் டாலர்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதுவும் ரூபாய் மதிப்பு குறைவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு காரணமாக இந்திய ரூபாய் மற்ற நாடுகளின் நாணயங்களை விட சற்று சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. டிரம்ப் அதிபராக இருக்கும் காலத்தில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து நிலைத்து நிற்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.