இன்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 85.12 ஆக குறைந்துள்ளது. இது ரூபாய் வரலாற்றில் மிகக் குறைந்த அளவாகும். சீன யுவானின் மதிப்பு குறைந்தது மற்றும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான டாலர் தேவை அதிகரித்தது ஆகியவை இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றன. குறிப்பாக, மாத இறுதியில் இறக்குமதியாளர்கள் டாலர் வாங்கும் போக்கு அதிகமாக இருப்பதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இந்த நிலைமையை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் ரூபாய் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாது என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், வெளிநாட்டு முதலீடுகள் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.