ரஷிய சுகாதாரத் துறை mRNA அடிப்படையிலான புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி பல ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டு, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையம், 'இந்த mRNA தடுப்பூசியை உருவாக்கி, மக்களுக்கு இலவசமாக வழங்குவோம்' என்று கூறியுள்ளது. பரிசோதனைகளின் போது, இந்த தடுப்பூசி புற்றுநோய் வளர்ச்சி மற்றும் பரவலை எவ்வாறு தடுக்கும் என்பதை கமலேயா தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் தெரிவித்தார்.