அணு ஆயுத போர் ஒத்திகை நடத்த இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சமீப காலமாக மேற்கத்திய நாடுகள் உக்ரைன் போரில் தங்களது ஆதரவை அதிகரிக்கப் போவதாக கூறி வருகின்றனர். இதனை ரஷ்யா விரும்பவில்லை. இதற்கு பதிலடி தரும் விதமாக அணு ஆயுத போர் ஒத்திகை நடத்த உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், போர்க்களங்களில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்த பயிற்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தப் போர் ஒத்திகை உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடியாக நடைபெறுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை சோதனை செய்து வந்தபோதிலும் அவ்வப்போது இப்போதுதான் முதல் முறையாக போர் ஒத்திகையை வெளிப்படையாக அறிவித்துள்ளது.