உக்ரைன் மீது 60 ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷியா இன்று கடுமையாக தாக்கியுள்ளது.
1945-ம் ஆண்டு 2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படையை தோற்கடித்த வெற்றி கொண்டாட்ட தினம் ரஷியாவில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு உக்ரைனின் தலைநகர் கீவ், கருங்கடல் நகரான ஒடிசா மற்றும் பிற நகரங்களை ரஷியா இன்று கடுமையாக தாக்கியது.
இதுகுறித்து உக்ரைனின் கீவ் நகர மேயர் கூறுகையில், ஈரானில் தயாரிக்கப்பட்ட 60 கமிகேஜ் ஆளில்லா விமானங்களை கொண்டு உக்ரைன் மீது ரஷியா இன்று கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், பல்வேறு கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பொதுமக்களில் 5 பேர் காயமடைந்தனர் என கூறியுள்ளார். மேலும் ஒடிசா நகரில் உணவு கிடங்கு ஒன்றின் மீது ஏவுகணை தாக்கியதில் அது தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பேர் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.