உக்ரைனின் தானிய வழித்தடத்தில் ரஷ்யா தொடர் தாக்குதல்

July 26, 2023

உக்ரைன் உடனான தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா கடந்த வாரம் விலகி உள்ளது. அப்போது முதல், உக்ரைனின் தானிய வழிதடத்தில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2022 ஜூலை மாதத்தில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே தானிய ஒப்பந்தம் ஏற்பட்டது. பல்வேறு உலக நாடுகள் மற்றும் ஐநாவின் முயற்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, உக்ரைனில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதிக்கு இரு நாடுகளும் தடை விதிக்கவில்லை. மேலும், சரக்கு கப்பல்கள் மீது எந்த […]

உக்ரைன் உடனான தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா கடந்த வாரம் விலகி உள்ளது. அப்போது முதல், உக்ரைனின் தானிய வழிதடத்தில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 2022 ஜூலை மாதத்தில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே தானிய ஒப்பந்தம் ஏற்பட்டது. பல்வேறு உலக நாடுகள் மற்றும் ஐநாவின் முயற்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, உக்ரைனில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதிக்கு இரு நாடுகளும் தடை விதிக்கவில்லை. மேலும், சரக்கு கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தவில்லை. ஆனால், ரஷ்யாவின் பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என ஐநா உறுதிமொழி அளித்திருந்தது. இந்நிலையில், தற்போது வரை ரஷ்ய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி தொடங்கப்படவில்லை என்பதால், ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியுள்ளது.

தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ரஷ்யா, உக்ரைனில் இருந்து பிற நாடுகளுக்கு தானிய ஏற்றுமதி செய்ய பயன்படுத்தப்படும் சாலை வழித் தடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, டன்யூப் நதிக்கரையில் அமைந்துள்ள உக்ரைனின் மிகப்பெரிய தானியக் கிடங்கை ஆளில்லா விமானம் மூலம் தாக்கி அழித்துள்ளது. மேலும், தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படும் டன்யூப் நதி மற்றும் ஒடெசா துறைமுகம் தாக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, சர்வதேச அளவில் கோதுமை மற்றும் சோளத்தின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu