உக்ரைனின் எட்டு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

July 17, 2023

உக்ரைனின் எட்டு ஆளில்லா விமானங்களை ரஷ்ய படையினர் சுட்டு வீழ்த்தியதால் அங்கு பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே ஆன போர் கடந்த பிப்ரவரியுடன் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் அரசு நேற்று கிரிமியா தீபகற்ப பகுதி அருகே வான்வழியே ஏழு ஆளில்லா விமானங்கள் மற்றும் நீருக்கடியில் இரண்டு ஆளில்லா விமானங்களைக் கொண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. […]

உக்ரைனின் எட்டு ஆளில்லா விமானங்களை ரஷ்ய படையினர் சுட்டு வீழ்த்தியதால் அங்கு பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே ஆன போர் கடந்த பிப்ரவரியுடன் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் அரசு நேற்று கிரிமியா தீபகற்ப பகுதி அருகே வான்வழியே ஏழு ஆளில்லா விமானங்கள் மற்றும் நீருக்கடியில் இரண்டு ஆளில்லா விமானங்களைக் கொண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் இரண்டு ஆளில்லா விமானங்கள் கடலோர பகுதியில் இருந்து சற்று தொலைவில் கருங்கடல் மீது சுட்டு வீழ்த்தப்பட்டன. ஐந்து ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவின் மின்னணு போர் படைகளை கொண்டு இடைமறிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டன. ஒரு ஆளில்லா விமானம் கருங்கடலின் வடபகுதியில் கண்டறியப்பட்டு நெருப்பு கொண்டு அழிக்கப்பட்டது என ரஷ்ய அமைச்சகம் தெரிவித்துள்ளது .இதில் உயிரிழப்பு அல்லது பாதிப்புகளோ எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து உக்கிரன் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu