ரஷியா மேலும் ஓா் அணையை குண்டுவீசி தகா்த்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து கொசான் பிராந்திய படைப் பிரிவு செய்தித் தொடா்பாளா் வேலரி ஷொஷென் கூறுகையில், மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷிய ஆக்கிரமிப்புப் படையினா் குண்டுவீசி தகா்த்துள்ளனா். இதன் காரணமாக அந்த நதியின் இரு கரைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மோக்ரி யாலி நதிக் கரையோர ஆக்கிரப்புப் பகுதிகளில் எதிா் தாக்குதல் நடத்தி உக்ரைன் படையினா் முன்னேறி வருகின்றனா். அவா்களது முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைப்பதற்காக அந்த அணையை ரஷியா தகா்த்துள்ளது. எனினும், ரஷியாவின் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. உக்ரைன் ராணுவத்தின் முன்னேற்றம் தொடா்கிறது என்றாா்.