ரஷ்யாவானது நார்ட் ஸ்ட்ரீம் 1 பைப்லைனில் குறைகள் இ௫ப்பதாகக் ௯றி
ஜெர்மனியின் எரிவாயு விநியோக திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடுவை ரத்து செய்துள்ளது. இதனால் எரிபொருளைப் பாதுகாப்பதில் ஐரோப்பிய நாடுகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளன.
பால்டிக் கடலுக்கு அடியில் இயங்கும் நோர்டு ஸ்ட்ரீம் 1 பைப்லைன் பராமரிப்புக்காக மூன்று நாட்கள் நிறுத்தப்பட்ட பிறகு 0100 GMT இல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டி௫ந்தது. ஆனால் ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமானது குழாயின் முக்கிய விசையாழியில் எண்ணெய் கசிவு ஏற்படுவதாகக் ௯றி அதனை சரிசெய்யும் வரை, விநியோகங்களை மறுதொடக்கம் செய்ய முடியாது என்று கூறியது. இதற்கான காலவரை பற்றி நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனால் நார்ட் ஸ்ட்ரீம் 1 விசையாழிகளை பராமரிக்கும் சீமென்ஸ் எனர்ஜி, இத்தகைய கசிவுகள் பொதுவாக ஒரு விசையாழியின் செயல்பாட்டை பாதிக்காது என்றும் இதனால் குழாய் இயங்குவதை நிறுத்தக்கூடாது என்றும் கூறியது. இது ரஷ்யாவின் உளவியல் போரின் ஒரு பகுதி என்று ஜெர்மன் நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவர் மைக்கேல் ரோத் ட்வீட் செய்துள்ளார். ஏற்கனவே உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் எரிவாயு பற்றாக்குறையை எதிர்கொள்கிறது .இந்நிலையில் நோர்ட் ஸ்ட்ரீம்1 ன் செயல்நிறுத்தம் அதனை இன்னும் தீவரப்படுத்தும் என வான் டெர் லேயன் ௯றினார். இதற்கு முன் ஜி7 குழுவில் ரஷ்ய பொ௫ட்களுக்கு விலை நிர்ணயிப்பது குறித்த பேச்சுவார்த்தையால் ரஷ்யா தனது ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக ௯றியி௫ந்தது. எனவே ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் அதனை சமாளிக்கத் தயாராகி வருகின்றன.
குறிப்பாக அதிகமாக ரஷ்ய பொருட்களை நம்பியிருக்கும் ஜெர்மனி, எரிவாயு சேமிப்பில் கிட்டத்தட்ட 85 சதவீதம் நிரம்பியுள்ளது. ஆனால் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் 95 சதவீதம் நிரப்புவது கடினம் என்று கூறுப்படுகிறது.