கிழக்கு உக்ரைனின் மேலும் இரு கிராமங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது.
ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு காா்கிவ் பிராந்தியத்தில் உள்ள லொஸோவா மற்றும் க்ரஸ்னோயே கிராமங்களை உக்ரைனின் கையிலிருந்து ரஷிய ராணுவம் மீட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 பிப்ரவரி மாதம், உக்ரைன் நாடு நேட்டோவுடன் இணைவதை எதிர்த்து, ரஷியா உக்ரைன் மீது படையெடுத்தது. அந்தப் போரின் ஆரம்பத்தில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் பல மாகாணங்களில் ரஷியா இடங்களை கைப்பற்றியிருந்தது. சில மாதங்களாக கிழக்கு உக்ரைனில் ரஷியா புதிய நிலப்பகுதிகளை கைப்பற்றி முன்னேறி வருகிறது. இந்நிலையில் இரண்டு கிராமங்களும் அதன் கட்டுப்பாட்டில் உள்ளன.