சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களை பூமிக்கு அழைத்து வர ரஷ்யாவின் சோயுஸ் எம் எஸ் 22 விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதால், அது பூமிக்கு ஆளில்லாமல் வரவழைக்கப்பட்டு, மாற்று விண்கலமாக சோயுஸ் எம் எஸ் 21 விண்கலம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த விண்கலத்திலும் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த விண்கலம், பிப்ரவரி 18ஆம் தேதி கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கசிவு காரணமாக திட்டம் கைவிடப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 20ம் தேதி சோயூஸ் எம் எஸ் 23 விண்கலம் பூமியிலிருந்து அனுப்பப்பட்டு, அதில் விண்வெளி நிலையத்தில் உள்ள 2 ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரர் ஆகியோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ், இந்த மாற்று திட்டமும் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மார்ச் 10ஆம் தேதிக்கு இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுவரை விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.