உக்ரைனில் 5 மில்லியன் ஏக்கர் காடுகளை ரஷ்யா அழித்துவிட்டது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
எகிப்தில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பூமியில் அமைதி ஏற்படுத்தாதவரை ஒரு பயனுள்ள காலநிலை கொள்கையை வகுக்க இயலாது. காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகம் போராடுவதை ரஷ்ய போர் தடுப்பதாகவும், திசை திருப்புவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் போர் நடவடிக்கையால் உக்ரேனில் கடந்த ஆறு மாதங்களில் 5 மில்லியன் ஏக்கர் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். அதோடு ரஷ்யா ஒரு கடுமையான உலகளாவிய உணவு நெருக்கடியைத் தூண்டுவதாகவும் தற்போது காலநிலை மாற்றத்தின் வெளிப்பாடுகளால் பாதிக்கப்படுபவர்களை இது மேலும் மோசமடைய செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.