உக்ரைன் போர் குறித்து தவறான தகவல் - கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது ரஷியா

August 18, 2023

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அது குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததற்காக கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தற்போது உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்களை யூட்யூபில் பதிவேற்றம் செய்ததற்காக கூகுள் நிறுவனம் மீது ரஷ்யா குறை கூறியது. இந்த வீடியோக்களை நீக்குமாறு ரஷ்யா அறிவுறுத்தி இருந்தது. ஆனால் கூகுள் நிறுவனம் அவற்றை நீக்கவில்லை. அதனையடுத்து கூகுள் நிறுவனம் மீது […]

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அது குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததற்காக கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

தற்போது உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்களை யூட்யூபில் பதிவேற்றம் செய்ததற்காக கூகுள் நிறுவனம் மீது ரஷ்யா குறை கூறியது. இந்த வீடியோக்களை நீக்குமாறு ரஷ்யா அறிவுறுத்தி இருந்தது. ஆனால் கூகுள் நிறுவனம் அவற்றை நீக்கவில்லை. அதனையடுத்து கூகுள் நிறுவனம் மீது ரஷ்யா மாஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு 30 லட்சம் ரூபில் அபராதம் விதித்தது. இதன் மதிப்பு சுமார் 26 லட்சம் ஆகும்.

முன்னதாக இதேபோல் ஆப்பிள் மற்றும் விக்கிபீடியா நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu