உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரான் தாக்குதல்

December 29, 2023

ரஷ்யா உக்ரைன் மீது சுமார் 122 ஏவுகணைகள் மற்றும் 36 ட்ரான்கள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 13 பேர் பலியாகி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. எட்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் மிக தீவிரமான தாக்குதல் நடந்துள்ளது என்று உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் 87 ஏவுகணைகள் மற்றும் 27 ட்ரான்கள் தடுத்து அழிக்கப்பட்டுள்ளது என்று ஜலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் 18 மணி நேரம் நடைபெற்றது அதில் […]

ரஷ்யா உக்ரைன் மீது சுமார் 122 ஏவுகணைகள் மற்றும் 36 ட்ரான்கள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 13 பேர் பலியாகி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

எட்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் மிக தீவிரமான தாக்குதல் நடந்துள்ளது என்று உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் 87 ஏவுகணைகள் மற்றும் 27 ட்ரான்கள் தடுத்து அழிக்கப்பட்டுள்ளது என்று ஜலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் 18 மணி நேரம் நடைபெற்றது அதில் ஏராளமான பள்ளிகள் மருத்துவமனைகள் கட்டிடங்கள் சேதமடைந்தன. இங்கு பனி சூழல் காரணமாக தீவிர போர் தடைபடுகிறது. உக்ரைன் தனது ஆதரவு நாடுகளிடம் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வான்வழி தற்காப்பு ஆயுதங்களை விரைந்து அளிக்க கேட்டு வருகிறது. ரஷ்யா தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் உக்ரைன் தலைநகர் உட்பட 6 நகரங்கள் மீது நடந்தேறியாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu