தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகல்

July 22, 2023

கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகி உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஆன போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் காலாவதியானதை தொடர்ந்து ரஷ்யா அதை புதுப்பிக்க மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. போதுமான உக்ரேனிய தானியங்கள் ஏழை நாடுகளுக்குச் சென்றடையவில்லை என ரஷ்யா புகார் தெரிவித்து ஒப்பந்தத்தில் இருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்கு செல்லும் எந்த […]

கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகி உள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஆன போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் காலாவதியானதை தொடர்ந்து ரஷ்யா அதை புதுப்பிக்க மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. போதுமான உக்ரேனிய தானியங்கள் ஏழை நாடுகளுக்குச் சென்றடையவில்லை என ரஷ்யா புகார் தெரிவித்து ஒப்பந்தத்தில் இருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்கு செல்லும் எந்த கப்பலையும் ராணுவப் பொருட்கள் எடுத்துச் செல்லும் கப்பலாகவே கருதப்படும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது

இதனால் தானியங்களின் விலை உயரும். கோடிக்கணக்கான மக்களுக்கு பசி மற்றும் மோசமான நிலை ஏற்படும் என ஐ.நா. எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர், தற்போது 69 நாடுகளில் சுமார் 36 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. பசி பட்டினியால் வாடுவார்கள். இதன் மூலம் பலர் இறக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
வ்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu