ரஷிய ராணுவம் உக்ரைனின் மின்உற்பத்தி கட்டமைப்புகளை குறிவைத்து பெரும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வரும் நிலையில், உக்ரைன் ராணுவம் ரஷிய தாக்குதலுக்கு பதிலடி அளித்து வருகிறது. இந்நிலையில், ரஷிய ராணுவம் உக்ரைனின் மின்உற்பத்தி கட்டமைப்புகளை குறிவைத்து பெரும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் அதிநவீன டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. நேற்று நள்ளிரவு முதல், உக்ரைனின் மேல் பல்வேறு ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. குறிப்பாக பாலிஸ்டிக் கின்ஸால் ஏவுகணைகள் மூலம் மேற்கு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.