நேட்டோ உக்ரைன் போரில் அளவுக்கு அதிகமாக தலையிட்டால் அது அணு ஆயுத போருக்கு வழி வகுக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரில் நேட்டோ அமைப்பு அளவுக்கு அதிகமாக தலையிட்டால் அது உலகளாவிய அணு ஆயுதப் போர் மூள்வதற்கு காரணமாக அமையும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது, உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகளின் பங்கேற்பு ஓர் வரம்பிற்குள் இருக்க வேண்டும். அதனை மீறி அந்த போரில் பிற நாடுகள் தலையிடுவது உலகளாவிய அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும். ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் தவறான குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். அதனை எதிர்கொள்ள ரஷ்ய பகுதிக்குள் தாக்குதல் நடத்தவும், படைகளை அனுப்பவும் அவை திட்டமிட்டு வருகின்றன. அதனை அந்நாடுகள் செயல்படுத்தினால் அவர்கள் மோசமான அழிவை சந்திப்பார்கள் என்று எச்சரித்தார்.
முன்னதாக உக்ரைனுக்கு நேட்டோ வீரர்கள் அனுப்பப்படலாம் என்று பிரான்ஸ் பிரதமர் மேக்ரான் கூறியிருந்தார். எனினும் உக்ரைனில் ரஷ்யாவுடன் போர் செய்ய நேட்டோ உறுப்பு நாடுகளின் படையை அனுப்பும் திட்டம் இல்லை என்று நேட்டோ அமைப்பின் பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்ட்ண்ட்பர்க் கூறியுள்ளார்.