ரஷ்யா ஜப்பானுடன் மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்கி இருக்கிறது.
ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் நானோ துறைமுகம் உள்ளது. இங்கு வாரந்தோறும் ரஷ்யாவிற்கு கப்பல் போக்குவரத்து சேவை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் இரு நாடுகளுக்கான மோதல் காரணமாக கடந்த 2020 முதல் சேவை நிறுத்தப்பட்டது.இந்நிலையில் ரஷ்ய அரசு இந்த கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதிக்குப் பிறகு தென்கொரியா நாட்டை சேர்ந்த சொகுசு கப்பல் தன் சேவையை ரஷ்யாவில் தொடங்கியுள்ளது. இந்த கப்பலில் 200 பயணிகள் வரை பயணம் செய்யலாம். தற்போது 43 பயணிகளுடன் ரஷ்யாவில் இருந்து இது ஜப்பானுக்கு புறப்பட்டு உள்ளது. அதற்கு முன்பு இந்த கப்பல் தென்கொரியாவில் உள்ள தொங்கே துறைமுகத்தில் நின்றுவிட்டு பின்னர் ஜப்பான் புறப்படும் என கூறப்பட்டுள்ளது.