கருங்கடல் பகுதியில் இங்கிலாந்து போர் விமானங்களை ரஷியா தடுத்து நிறுத்தியுள்ளது.
ரஷியா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் கருங்கடல் பகுதியில் பறந்த இங்கிலாந்தின் இரண்டு போர் விமானங்களை ரஷிய விமானங்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரஷிய எல்லைக்குள் இங்கிலாந்து விமானங்கள் வந்ததால் ரஷியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இங்கிலாந்து தரப்பில் கூறும் போது, இது சர்வதேச வான்பரப்பில் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு என்று கருத்து தெரிவித்துள்ளது.