மேற்கு ரஷ்யாவில் உள்ள எண்ணெய் கிடங்கில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்தக் கிடங்கு தீ பற்றி எரிந்தது.
நேற்று மேற்கு ரஷ்யாவில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. அதில் அந்த கிடங்கு தீ பற்றி எரிந்தது என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் எல்லையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளின்டர்ஸி நகரில் நடத்தப்பட்டது என்றும், இதில் ஆறாயிரம் கன மீட்டர் கொள்ளளவு உடைய நான்கு எண்ணெய் தொட்டிகள் கொழுந்துவிட்டு எரிந்ததாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.














