உக்ரைனின் பொதுமக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த கிட்டத்தட்ட 400 ஈரானிய ஆளில்லா விமானங்களை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ௯றியதாக உக்ரேனிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் மக்களைத் தாக்க, ஈரானில் தயாரிக்கப்பட்ட சுமார் 400 ஷாஹெட்-136 கமிகேஸ் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
அதாவது அக்டோபர் 17 அன்று, ரஷ்யா 43 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது கொடூரமான தாக்குதலைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ரஷ்யப்படைகள் 28 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கெய்வைத் தாக்கியது. அதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபுறம் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதை ஈரான் தொடர்ந்து மறுத்து வருவதால், ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான உறவு வலுவடைகிறது. உலக நாடுகள் அனைத்தும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி ரஷ்யா - உக்ரைன் போரில் கிரிமியா சாலைப் பாலத்தில் ஒரு டிரக் வெடித்ததில் கிரிமியாவை நோக்கிச் சென்ற ரயிலின் ஏழு எரிபொருள் தொட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 3பேர் பலியாகினர். அத்துடன் பாலத்தின் இரண்டு பகுதிகளும் இடிந்து விழுந்தது. இதன்விளைவாக ரஷ்யத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் உதவியை அதிகரிக்குமாறு உக்ரைன் அதிபர் மேற்கத்திய நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தி அறிக்கை கூறுகிறது.