ரஷ்யா தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சனில் இருந்து படைகளை திரும்பப்பெற விருப்பம் தெரிவித்துள்ளது. எனினும் ரஷ்யாவின் இந்த முடிவை உக்ரைன் சந்தேக கண்ணோடு பார்க்கிறது.
ரஷ்யாவின் இந்த முடிவு குறித்து கடற்படை பகுப்பாய்வு மையத்தின் இயக்குனர் மைக்கேல் கோஃப்மேன் கூறுகையில், 'கெர்சனில் உள்ள நிலைமை தெளிவாக இல்லை. ரஷ்யப் படைகள் சில பகுதிகளிலிருந்து வெளியேறியது. சில இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டது. அனால் மீண்டும் வீரர்களை அனுப்பி படைக்கு வலு சேர்த்தோம். ஆயுத விநியோகம் தடைபட்டிருந்தாலும், ரஷ்யப் படைகளிடம் வெடிமருந்துகள் இருந்தது . அப்படியும் அங்கு சண்டை கடினமாக உள்ளது.” என்று அவர் மேலும் கூறினார்.
கெர்சனில் உள்ள பொதுமக்களை இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா வேண்டுகோள் விடுத்தது. "பெரும்பாலும் எங்கள் வீரர்கள், கிழக்கு கரைக்கு புறப்படுவார்கள்" என்று கெர்சனில் உள்ள ரஷ்ய நிர்வாகியான Kirill Stremousov கூறினார். சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் கெர்சன் நகரில் உள்ள முக்கிய நிர்வாக கட்டிடத்தின் மேலே கொடி பறக்கவில்லை. இதனால் ரஷ்யாவின் கூற்று உறுதியான முடிவு போல் தோன்றுகிறது. அனால் ரஷ்யா தவறான தகவலை பரப்பி திசை திருப்ப முயற்சிப்பதாக உக்ரைன் சந்தேகப்படுகிறது.