தானிய ஏற்றுமதி செய்யும் உக்ரைனுடன் செய்யப்பட்டிருந்த கருங்கடல் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகல்.
உக்ரைன் ரஷ்யாவின் இடையே ஏற்பட்டு வரும் போரால் தானியங்கள் ஏற்றுமதி மிகவும் குறைந்து, உணவு நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. தானியங்கள் ஏற்றுமதி தொடர்ந்து நடைபெறுவதற்கு ஐ.நா மற்றும் துருக்கியின் முயற்சியால் கடந்த வருடம் ஜூலை மாதம் ரஷ்யா உடன் "கருங்கடல் தானிய ஒப்பந்தம்" என்ற உடன்படிக்கை இயற்றப்பட்டது. இதன்படி ஆயுதங்கள் ஏதும் இல்லை என பரிசோதித்து உறுதி செய்த பின்னர் உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
மேலும் இந்த ஒப்பந்தம் 2 முறை காலாவதி ஆகி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இன்று இந்த ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் ரஷ்யா ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
சொந்த விவசாய ஏற்றுமதிகளுக்கு உதவும் வகையில் பணம் செலுத்துதல், காப்பீடு மற்றும் கப்பல் போக்குவரத்து ,ஆகியவற்றை அனுமதிக்கும் ஒரு இணையான ஒப்பந்தத்தை மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் தடுத்து வைத்தி ருப்பதாகவும் இதனால் ரஷ்யாவிற்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டு இருப்பதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இதனால் பல்லாயிரம் டன் கணக்கான தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டு அதன் மூலம் பெறும் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என அச்சம் ஏற்பட்டுள்ளது.