நேபாள மலை பகுதியில் ரஷிய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்பு

October 9, 2024

நேபாள மலை பகுதியில் ரஷிய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் நேபாளம் இடையே உள்ள இமயமலையில் மலையேற்ற வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக ஏறுகிறார்கள். கடந்த 6ம் தேதி, ரஷியாவின் 5 மலையேற்ற வீரர்கள் நேபாளத்திலிருந்து தளகிரி சிகரத்தை நோக்கி பயணம் தொடங்கினர். அவர்கள் காலை 6 மணிக்கு பயணத்தை ஆரம்பித்தனர். அதன்பிறகு 11 மணிக்கு ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, மாயமான வீரர்களை தேடும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் […]

நேபாள மலை பகுதியில் ரஷிய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் நேபாளம் இடையே உள்ள இமயமலையில் மலையேற்ற வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக ஏறுகிறார்கள். கடந்த 6ம் தேதி, ரஷியாவின் 5 மலையேற்ற வீரர்கள் நேபாளத்திலிருந்து தளகிரி சிகரத்தை நோக்கி பயணம் தொடங்கினர். அவர்கள் காலை 6 மணிக்கு பயணத்தை ஆரம்பித்தனர். அதன்பிறகு 11 மணிக்கு ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, மாயமான வீரர்களை தேடும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது, 5 வீரர்களின் சடலங்கள் 7 கிலோமீட்டர் உயரத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். மலை சிகரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விசாரணை தொடர்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu