ரஷ்ய ட்ரோன்கள் உக்ரைன் தானியக் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில் உள்ள தானிய கிடங்கை ரஷ்ய ஆளில்லா விமானம் இன்று தாக்கியது. சமீபத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான கருங்கடலில் இருந்து பாதுகாப்பான ஏற்றுமதிகளை அனுமதிக்கும் ஒப்பந்தம் முறிந்தது. அதற்கு பிறகு நடைபெறும் தாக்குதல் இதுவாகும். உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புகளில் தாக்குதலால் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் தானியக் களஞ்சியங்களும் இருந்தன. பொதுமக்கள் உயிரிழந்ததாக செய்திகள் எதுவும் இல்லை.
இந்த தாக்குதலின் போது ஈரானில் தயாரிக்கப்பட்ட ஒன்பது ஷாஹெட் தாக்குதல் ட்ரோன்களை வான் பாதுகாப்புப் படைகள் அழித்துள்ளனர் என்று உக்ரைனின் தெற்கு இராணுவ படை கூறியது. முன்னதாக உக்ரேனிய வீரர்கள் குழுவை ஏற்றிச் சென்ற படகை ரஷிய வீரர்கள் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.