ரஷ்யா ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்வதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் மும்பையில் வரும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஐ.ஓ.சி.யின் 2 நாள் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக் சாசன விதிமுறையை மீறிய செயலில் ஈடுபட்டதால் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியை சஸ்பெண்டு செய்வது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. அது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது. ரஷ்யா தடை காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச போட்டிகளில் ரஷ்யா வீரர்கள் ரஷ்யா பெயரில் பங்கேற்க முடியாது. அவர்கள் தனிப்பட்ட போட்டியாளர்களாக பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.