கடந்த ஆகஸ்ட் 6 அன்று, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் எதிர்பாராத தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ரூபிள் நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, தொடர்ந்து 6வது நாளாக ரூபிள் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜிஎம்டி நேரப்படி காலை 8 மணிக்கு, டாலருக்கு எதிரான ரஷ்யாவின் ரூபிள் நாணயம் 92.50 புள்ளிகளாக இருந்தது. இது, தாக்குதல் நடந்ததிலிருந்து 8.5% வீழ்ச்சி ஆகும்.
கடந்த ஜூன் 12 அன்று மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளுக்குப் பின்னர், முக்கியமான நாணயப் பரிவர்த்தனைகள் கவுண்டர் மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டதால், விலை நிர்ணய தரவுகள் தெளிவற்றதாக உள்ளன. இருப்பினும், கிடைத்த தகவல்களை கொண்டு ரூபிள் மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீன யுவானுக்கு எதிரான ரூபிள் 12 புள்ளிகள் ஆகவும், ஐரோப்பிய யூரோவுக்கு எதிரான ரூபிள் 101.9 புள்ளிகள் ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.