மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.
ரஷ்யா மட்டுமின்றி ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளிலும் மக்கள் வாக்களிக்கின்றனர். ரஷ்யாவின் 11 மண்டலங்களிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுக்கு சென்று வாக்களிக்கிறார்கள். சிலர் மின்னஞ்சல் வாயிலாகும் வாக்களிக்கிறார்கள். வெளிநாடுகளில் முன்கூட்டியே வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போதைய அதிபர் புதின் மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் நிக்கோலாய் கருடோனோ தேசியவாத லிப்ரல் டெமாக்ரடிக் கட்சியின் லியோனி மற்றும் புதிய மக்கள் கட்சியின் டாவின்கோ ஆகியோரும் போட்டியில் உள்ளனர். இந்த கட்சிகள் க்ரெம்லின் மாளிகை மற்றும் அதன் கொள்கைகளை ஆதரிக்கின்றன.
தேர்தலில் நான்கு முனை போட்டி இருந்தாலும் புதின் மீண்டும் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக அதிபராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 17 வரை நடைபெற உள்ளது. அதாவது மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இன்று முதல் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வெற்றி பெறும் வேட்பாளர் மே மாதம் அதிபராக பதவியேற்பார்.