இராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக பல ரஷ்யர்கள் மத்திய ஆசியாவிற்கு தப்பிச் செல்கின்றனர். அவ்வாறு வந்தவர்களை நாடு கடத்தும் எந்த திட்டமும் உஸ்பெகிஸ்தானுக்கு இல்லை என்று தாஷ்கண்ட் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யாவின் இராணுவ பலத்தை வலுப்படுத்துவதற்காக,
புடின் போரிடத் தகுதியுடையவர்கள் கட்டாயமாக ராணுவத்தில் இணைய வேண்டும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து நூறாயிரக்கணக்கான ஆண்கள் அவர்களது குடும்பங்களுடன் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் பலர் உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் பிற மத்திய ஆசிய முன்னாள் சோவியத் குடியரசுகளுக்குச் சென்றுள்ளனர். இது குறித்து உஸ்பெகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில், மற்ற மாநிலங்களின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதாகவும், உக்ரேன்-ரஷ்யா மோதலுக்கு அமைதியான தீர்வுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சட்டத்தை மீறாத வெளிநாட்டு குடிமக்கள் கட்டாய நாடுகடத்தலுக்கு உட்பட மாட்டார்கள் என்றும் அவ்வறிக்கை கூறியது.
அதே சமயம் எத்தனை ரஷ்யர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்பதை உஸ்பெகிஸ்தான் அறிக்கையில் கூறவில்லை. ஆனால் அண்டை நாடான கஜகஸ்தானில் சுமார் 100,000 ரஷ்யர்கள் வந்துள்ளதாக அது கூறியுள்ளது. இ௫ப்பினும் சில நாடுகள் தங்கள் அரசாங்கங்கள் மாஸ்கோவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதால், தங்கள் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறது. இந்த வாரம் ஒரு ரஷ்ய பாலே நடனக் கலைஞர் தாஷ்கண்டில் நிகழ்த்திய ஒரு பாடல் ரஷ்யாவின் போர் முயற்சியை ஆதரிப்பதாகக் கூறி உஸ்பெக் அதிகாரிகள் கண்டித்தனர்.