பனிப்போருக்கு பின்பு 30 வருடங்களுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்ட ரஷ்யாவின் வெடிகுண்டு முகாம்கள் தற்போது மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன என்று செய்திகள் வந்துள்ளன. எனினும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. சமீபத்தில் ரஷ்ய படைகள் கெர்சன் மற்றும் டொனுட்ஸ்க் பகுதிகளில் இருந்து வெளியேறியது. ரஷ்யாவின் இந்த செயல் உக்ரைனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா தன்னுடைய வெடிகுண்டு முகாம்களை சீர்படுத்தும் ஏற்பாடுகளை செய்து வருவது பெரிய அளவிலான போருக்கு அது தயாராகி வருகிறது என்ற அச்சத்தை கொடுத்துள்ளது.
அந்நாட்டு அரசு ஊழியர்கள் அமைதியாக அடித்தளங்கள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட வசதிகளை சரிபார்த்து வருகின்றனர். அதோடு சோவியத் காலத்தில் இருந்து பயன்படுத்தப்படாத நிறுவல்களை சரிசெய்கின்றனர். வரும் நாட்களில் மோதலின் போது சிவில்-பாதுகாப்பு உள்கட்டமைப்பு தயாராக இருப்பதை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறுகின்றனர்.
ரஷ்யாவின் இந்த செயலானது சமுதாயத்தில் ஒரு பரந்த இராணுவமயமாக்கலை தூண்டுவதாகவே பரவலாக பார்க்கப்படுகிறது. கிரெம்ளின் அதிகாரிகள் இந்தப் போரை ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போராக சித்தரிக்கின்றனர். இதற்கிடையே ரஷ்ய கல்வி அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் சோவியத் காலத்தின் அடிப்படை இராணுவப் பயிற்சியை அடுத்த ஆண்டு முதல் மீண்டும் நிலைநிறுத்துவதாக தெரிவித்தனர்.