உக்ரைன் மீது ரஷியாவின் பெரும் வான்வழி தாக்குதல் – பாதுகாப்பு பலப்படுத்த மேற்கு நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

June 30, 2025

ரஷியா 477 டிரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகளுடன் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. பல்வேறு நகரங்களில் உட்கட்டமைப்பு சேதம், பலர் காயம், ஒரு போர் விமானி உயிரிழப்பு என பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லிவிவ், செர்காசி, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் உள்ளிட்ட ஆறு மாகாணங்களில் ரஷியாவின் வான்வழி தாக்குதல்கள் பதிவாகின. செர்காசியில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்; பல மாடி கட்டிடங்கள் மற்றும் கல்லூரி சேதமடைந்தன. இவானோ-ஃபிராங்கிவ்ஸ்கில் ஒரு பெண் காயமடைந்தார். தாக்குதலை எதிர்க்கும் பணியில் […]

ரஷியா 477 டிரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகளுடன் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. பல்வேறு நகரங்களில் உட்கட்டமைப்பு சேதம், பலர் காயம், ஒரு போர் விமானி உயிரிழப்பு என பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிவிவ், செர்காசி, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் உள்ளிட்ட ஆறு மாகாணங்களில் ரஷியாவின் வான்வழி தாக்குதல்கள் பதிவாகின. செர்காசியில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்; பல மாடி கட்டிடங்கள் மற்றும் கல்லூரி சேதமடைந்தன. இவானோ-ஃபிராங்கிவ்ஸ்கில் ஒரு பெண் காயமடைந்தார். தாக்குதலை எதிர்க்கும் பணியில் ஈடுபட்ட உக்ரைனிய F-16 விமானி, ஏழு இலக்குகளைத் தகர்த்தபின் இறுதியாக சுடும் போது அவரது விமானம் விழுந்து உயிரிழந்தார். உக்ரைனிய படைகள் 211 டிரோன்கள், 38 ஏவுகணைகளை அழித்ததாக தெரிவித்தன. அதிபர் ஜெலன்ஸ்கி, வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த மேற்கு நாடுகளின் உதவியை கோரியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu