ரஷ்யாவின் வாக்னர் படைத்தலைவர் பிரிகோஸின் விமான விபத்தில் பலியானார் என தகவல் வெளியாகியி ருக்கிறது.
ரஷ்யாவில் தனியார் ராணுவ அமைப்பான வாக்குனர் குழு ரஷ்ய அதிபருக்கு எதிராக கடந்த மாதம் கலகம் செய்தது. இது பெரிய புரட்சியாக வெடிக்கும் என்று உலகமே எதிர்பார்த்து இருந்தது. அப்போது ரஷ்ய அதிபர் புடின் அந்த கிளர்ச்சியை அடக்கினார். அந்த அமைப்பின் தலைவர் பிரிகோஸின் ரஷ்யாவை விட்டு வெளியேறி பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்தார்.
இந்நிலையில், ரஷ்யாவின் டிவேர் மாகாணத்தில் நடந்த விமான விபத்தில் 10 பேர் பலியானார்கள் என்று தகவல் வந்துள்ளது அதில் வாகனக் குழுவின் தலைவர் பிரிகோசினும் ஒருவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானப் பயணிகள் பட்டியலில் பிரிகோஸின் பெயர் உள்ளதாக கூறப்பட்ட போதிலும் உயிரிழந்தவர்களில் பிரிக்கோசின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.