ரஷ்யாவிலிருந்து அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளின் 3-வது தொகுப்பு 2023 ஜனவரி-பிப்ரவரியில் இந்தியா வந்தடையும்.
2018-ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவுடன் ரூ.35,000 கோடி மதிப்பில் 5 தொகுப்பு எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. எஸ்-400 அதிநவீன ஏவுகணையாகும். இந்த ஏவுகணை 400கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட துல்லியமாக தாக்கும். இதுவரையில் இரண்டு தொகுப்பு ஏவுகணைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் மூன்றாம் தொகுப்பு 2023 ஜனவரி - பிப்ரவரியில் இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்று இந்திய பாதுகாப்புத் துறை தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த நிதி ஆண்டுக்குள் மீதமுள்ள இரண்டு தொகுப்புகளும் இந்தியாவை வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது.