வட கொரிய அரசு தென் கொரியாவுடன் உள்ள எல்லைகளை நிரந்தரமாக துண்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, வட கொரியாவில் இருந்து தென் கொரியா செல்லும் சாலை மற்றும் ரெயில்வே வழித்தடங்களை மூடுவதற்கான உத்திரவை பிறப்பித்துள்ளனர். மேலும், எல்லைப் பகுதிகளில் கண்ணிவெடிகளை புதைத்து, தடுப்புகள் அமைக்கவும், கூடுதல் ராணுவ வீரர்களை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான பயணம் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. எதிரிகள் ஆயுதங்கள் கொண்டு மாட்டிக்கொண்டால், அணு ஆயுதங்களை உபயோகிப்பதற்கு தயங்கமாட்டோம் என்று கிம் ஜான் உன் கூறியுள்ளார். தென்கொரியாவும் அமெரிக்காவும் கூட்டாக ராணுவ பயிற்சிகளை நடத்துவது, கொரிய தீபகற்பத்தில் சமநிலையை பாதிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.