எஸ்.ஏ.20 இறுதிப்போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தியது எம்.ஐ.கேப்டவுன் அணி.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் 3-வது சீசனின் இறுதியில், எம்.ஐ.கேப்டவுன் அணியும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மோதின. டாஸ் வென்ற எம்.ஐ.கேப்டவுன் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. அதன்பின், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 18.4 ஓவர்களில் 105 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன் மூலம், எம்.ஐ.கேப்டவுன் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
ரபாடா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார், டிரெண்ட் போல்ட் மற்றும் ஜார்ஜ் லிண்டே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.