சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு விரைவில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார்.
திருவனாங்கூர் தேவஸ்தான தலைவர் தலைமையில் சபரிமலையில் மேம்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள், பக்தர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டத்தை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவஸ்தான தலைவர் கூறுகையில் சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் புதிதாக காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் காப்பீட்டு தொகையாக ஒருவருக்கு ரூபாய் பத்து கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக காப்பீடு நிறுவனங்களுடன் விரைவில் ஒப்பந்தம் போடப்பட உள்ளது