சபரிமலையில் ரோப்வே திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தேவையான சரக்குகளை எடுத்துச் செல்ல புதிய 2.7 கிலோமீட்டர் ரோப்வே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது, இதில் வனம், வருவாய் மற்றும் தேவசம் துறைகள் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்காக புதிய அம்சங்களை இணைத்து திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரோப்வே பணிகளை விரைவில் தொடங்குவதற்கான தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி 2027-ம் ஆண்டு சபரிமலை சீசனுக்குள் ரோப்வே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.