சபரிமலையில் பக்தர்கள் சாம்பிராணி, கற்பூரம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கான திறப்பு 15-ந்தேதி நடக்கின்றது. இந்த நாளில் புதிய மேல் சாந்திகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். இவ்வாண்டு, சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் எருமேலி பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் சாலை மேம்பாடு நடைபெறுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளாக, தேவையற்ற பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், ஐயப்பன் பக்தர்கள் தங்களுடன் கொண்டு வரக்கூடிய சாம்பிராணி, கற்பூரம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பம்பை ஆற்றில் பக்தர்கள் ஆடைகள், மாலைகள் போன்றவற்றை இடவும் தடை செய்யப்பட்டுள்ளது,














