இன்றும் நாளையும் கடலோர பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட போலீசாரால் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தவிர்க்க சாகர் காவாச் எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது.
இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் நடமாட்டத்தை தடுக்கும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோரப் பகுதிகளில் இது சரியாக நடக்கிறதா என்பதை பரிசோதிக்கும் வகையில் இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மரைன் போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து சாகர் கவாச் செல்லும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது இந்த பயிற்சியாளர் தமிழகத்தின் கடலோரப் பகுதி இன்றும் நாளையும் நடைபெற இருக்கிது.
இது நாகப்பட்டினம் வேதாரணியம் உள்ளிட்ட கடலோர மீனவர் கிராமங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாக பிரிந்து ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.