சஹாரா பாலைவன தூசியால் கிரீஸ் நாட்டில் ஆரஞ்சு வண்ண மூடுபனி

April 24, 2024

சஹாரா பாலைவனத்தில் இருந்து வந்த தூசி, மூடுபனி வடிவில் கிரீஸ் நாட்டை சூழ்ந்துள்ளது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிரீஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளை மூடுபனி சூழ்ந்துள்ளது. இதன் மூலம், கிரீஸ் நகரங்கள் எழில் சூழ்ந்து காணப்பட்டாலும், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் வானிலை மையம் அந்நாட்டின் வளிமண்டலத்தில் அதிக அளவில் தூசி காணப்படுவதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் தெற்கு பகுதியில் சஹாரா பாலைவனத்தில் இருந்து வந்த தூசி படலங்கள் நிறைந்துள்ளதாக […]

சஹாரா பாலைவனத்தில் இருந்து வந்த தூசி, மூடுபனி வடிவில் கிரீஸ் நாட்டை சூழ்ந்துள்ளது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிரீஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளை மூடுபனி சூழ்ந்துள்ளது. இதன் மூலம், கிரீஸ் நகரங்கள் எழில் சூழ்ந்து காணப்பட்டாலும், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டின் வானிலை மையம் அந்நாட்டின் வளிமண்டலத்தில் அதிக அளவில் தூசி காணப்படுவதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் தெற்கு பகுதியில் சஹாரா பாலைவனத்தில் இருந்து வந்த தூசி படலங்கள் நிறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது, புதன்கிழமை முதல் படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளது. ஏதென்ஸ் நகரை ஆரஞ்சு நிற மூடுபனி சூழ்ந்துள்ள காணொளி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நாசா, அடுத்த சில நாட்களுக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் தூசி கலந்த மூடுபனி ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu