சஹாரா பாலைவனத்தில் இருந்து மிகப்பெரிய அளவிலான தூசி படலம் அட்லாண்டிக் கடல் பகுதியை தாண்டி மெக்சிகோ வளைகுடா மற்றும் புளோரிடாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், ஃப்ளோரிடாவுக்கு அதிக பாதிப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
சஹாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பி உள்ள வறண்ட தூசி படலமானது, காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால், புயல் உருவாகுவது பாதிப்படையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நிகழாண்டுக்கான பருவ மழையில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். மேலும், ஜூன் மற்றும் ஜூலை போன்ற மாதங்களில் இது போன்ற நிகழ்வுகள் அரிதினும் அரிதாக ஏற்படக்கூடியது என்பதால், இதன் பக்க விளைவுகள் எதிர்பாராததாக இருக்கலாம் என கவலை தெரிவித்துள்ளனர்.