சென்னை மாநகராட்சி அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் 392 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றி வரும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தினக்கூலி மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூபாய் 3.07 கோடி கூடுதல் செலவாகிறது. மேலும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது