கோல் இந்தியா நிறுவனத்தில் 3 சதவீதம் பங்குகள் விற்பனை

கோல் இந்தியா நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 4 ஆயிரத்து 158 கோடி கிடைக்கும். பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை செய்யப்படுவது இந்த நிதியாண்டில் முதல் முறை ஆகும். பெரும் முதலீட்டாளர்களுக்காக கோல் இந்தியாவில் ஆஃபர் ஃபார் சேல் விற்பனை இன்று துவங்குகிறது. நாளை (ஜூன்2) முதல் சாதாரன முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்கிட முடியும். இதற்காக மத்திய அரசு மூன்று சதவீத பங்குகளை ஒதுக்கீடு […]

கோல் இந்தியா நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ரூ. 4 ஆயிரத்து 158 கோடி கிடைக்கும். பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை செய்யப்படுவது இந்த நிதியாண்டில் முதல் முறை ஆகும். பெரும் முதலீட்டாளர்களுக்காக கோல் இந்தியாவில் ஆஃபர் ஃபார் சேல் விற்பனை இன்று துவங்குகிறது. நாளை (ஜூன்2) முதல் சாதாரன முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்கிட முடியும். இதற்காக மத்திய அரசு மூன்று சதவீத பங்குகளை ஒதுக்கீடு செய்ய இருக்கிறது. இதில் 1.5 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடும் அடங்கும், என்று முதலீடு மற்றும் பொது சொத்துக்கள் நிர்வாக துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் 1.5 சதவீத பங்குகளை வினியோகிக்க அரசாங்கம் சார்பில் 9.24 கோடி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதற்கான கட்டணம் ஒரு பங்கிற்கு ரூ. 225 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர இதே விலையில் கூடுதல் ஒதுக்கீடு முறையலும் பங்குகள் விற்பனை நடைபெற இருக்கிறது. தற்போது கோல் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசு 66.13 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu