24 வருடங்கள் கழித்து பூமியில் விழுகிறது ஐரோப்பிய செயற்கைகோள்

கடந்த 2000 ஆம் ஆண்டில் சூரிய-பூமி இணைப்பை ஆய்வு செய்வதற்காக, சால்சா, ரும்பா, டாங்கோ மற்றும் சாம்பா ஆகிய 4 செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டன. ஐரோப்பிய விண்வெளி மையத்தால் அனுப்பப்பட்ட இந்த செயற்கை கோள்கள் 2 ஆண்டுகள் பணி செய்யும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், கடந்த 24 ஆண்டுகளாக பணியாற்றி எண்ணற்ற அறிவியல் தரவுகளை வழங்கியுள்ளன. இந்த நிலையில், கிளஸ்டர் செயற்கைக் கோள்களில் ஒன்றான சால்சா, தனது ஆயுட்காலத்தை முடித்துக் கொண்டு, பூமிக்குள் விழ உள்ளது. வரும் […]

கடந்த 2000 ஆம் ஆண்டில் சூரிய-பூமி இணைப்பை ஆய்வு செய்வதற்காக, சால்சா, ரும்பா, டாங்கோ மற்றும் சாம்பா ஆகிய 4 செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டன. ஐரோப்பிய விண்வெளி மையத்தால் அனுப்பப்பட்ட இந்த செயற்கை கோள்கள் 2 ஆண்டுகள் பணி செய்யும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், கடந்த 24 ஆண்டுகளாக பணியாற்றி எண்ணற்ற அறிவியல் தரவுகளை வழங்கியுள்ளன. இந்த நிலையில், கிளஸ்டர் செயற்கைக் கோள்களில் ஒன்றான சால்சா, தனது ஆயுட்காலத்தை முடித்துக் கொண்டு, பூமிக்குள் விழ உள்ளது.

வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, சால்சா பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கட்டுப்படுத்தப்பட்ட பூமி நுழைவை செயற்கைகோள் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. சால்சாவைத் தொடர்ந்து, ரும்பா, டாங்கோ மற்றும் சாம்பா ஆகிய மற்ற செயற்கைக்கோள்கள் 2025 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் ஒவ்வொன்றாக பூமிக்குள் விழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் சால்சா விழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu