வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றது. தற்போது எதிர்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றதில் வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.