சீனா, நிலவின் மறுபக்கத்தில் இருந்து கல் மற்றும் மண் மாதிரிகளை வெற்றிகரமாக பூமிக்கு கொண்டு வந்துள்ளது.
இதுவரை யாரும் சென்றடையாத நிலவின் மறுபக்கத்துக்கு, சாங்கே 6 என்ற விண்கலத்தை சீனா அனுப்பியது. இதிலிருந்து லேண்டர், அங்கிருந்த கல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்தது. அதன் பிறகு, பூமியை நோக்கி பயணித்து வந்த லேண்டர், கடந்த செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்துள்ளது. நிலவின் மறுபக்கத்தில் இருந்து கல் மற்றும் மண் மாதிரிகள் எடுத்து வரப்பட்டுள்ளது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இது பற்றி அறிக்கை வெளியிட்ட சீன தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம், சாங்கே 6 திட்டம் முழுமையான வெற்றியடைந்துள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.