மின்னணு சாதனங்களை தயாரித்து வரும் முன்னணி நிறுவனமான சாம்சங், ஓஎல்இடி டிவி வர்த்தகத்தில் களம் இறங்க உள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில், 83 இன்ச் ஓஎல்இடி டிவியை சாம்சங் வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில், எல்ஜி நிறுவனம் மட்டுமே 83 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே பேனலை தயாரித்து வருகிறது. அவை, எல் ஜி மற்றும் சோனி தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஓஎல்இடி டிவியில், பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, 144 Hz புதுப்பிப்பு திறன், வயர்லெஸ் டால்பி அட்மாஸ், ஐ கம்ஃபோர்ட் மோட் ஆகியவை இடம்பெறும் என்று கருதப்படுகிறது. அத்துடன், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, இந்த ஓஎல்இடி டிவி விற்பனைக்கு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.